Sunday, October 17, 2010

தமிழ் செம்மொழி | இயற்கையின் மொழி | உயிர்களின் மொழி | உணர்வுகளின் வெளிப்பாடு

தமிழ் இது வெறும் மொழி மட்டும் அல்ல .நமது உணர்வுகளை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியும் கூட.இயற்க்கையோடு மிக அதிகமாக தொடர்புடைய மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று .கல் தோன்றா காலம் முதல் இன்றைய தகவல் தொழில் நுட்ப காலம் வரை வளர்ந்து வந்த நமது செம்மொழியின் பெருமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .தமிழ் பேசுவதையே அவமானமாக நினைக்கும் மக்கள் இன்று நமது தமிழ் நாட்டிலே மிக அதிகம் .இந்த நிலை நீடிக்க நாம் அனுமதிக்கலாமா.உலக மொழிகளில் மிக முக்கியமான 20 மொழிகளில் தமிழும் ஒன்று .தமிழிற்கு வயதில்லை ஆனால் உயிருண்டு .தமிழை வளர்த்தவர்கள் யாருமில்லை தமிழால் வளர்ந்தவர்கள் ,வாழ்க்கை பெற்றவர்கள் என்று ஏராளம் உண்டு .இப்படிப்பட்ட தமிழ் மொழியின் பாதத்தில் ஒரு மணல் பகுதியாக இந்த இணையத்தளம் சமர்ப்பணம் .

No comments:

Post a Comment